search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணறு தூர்வாருதல்"

    திருவண்ணாமலை அருகே கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பொலக்குணம் கிராமத்தில் கிணறு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி மண்ணை அள்ளி வெளியேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு கரையில் இருந்து திடீரென மண் சரிந்து விழுந்து தொழிலாளர்களை அமுக்கியது.

    இதில் 3 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #TNMudslide

    ×